சென்னை: காவல்துறை உடையில் வந்து லாரி உரிமையாளரை சிலர் கடத்திச் சென்ற சம்பவம் சென்னையை அடுத்த செங்குன் றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் கடத்தல் நிகழ்ந்த 12 மணி நேரத்தில் போலிசார் குற்ற வாளிகளை மடக்கிப் பிடித்தனர். செங்குன்றத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசன், அண்மையில் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய் வெடுத்து வருகிறார். இந்நிலை யில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் போலிசார் உடையில் நுழைந்த சிலர், தங்களுக்குக் கிடைத்த புகாரின் பேரில் கணேசனை விசாரிக்க வேண்டும் என்று கூறி அவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் கணேசன் வீடு திரும்பாததாலும், அவரைத் தொடர்புகொள்ள முடியாததாலும் கவலையும் சந்தேகமும் அடைந்த குடும்பத்தார் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதுதான் அவர் கடத்தப்பட் டது தெரியவந்தது.
இந்நிலையில் கணேசனின் கைபேசியில் இருந்து அவரது உறவினர் ராமச்சந்திரனுக்கு ஓர் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய கடத்தல்காரர்கள், ரூ.25 லட் சம் தரவில்லை எனில் கணே சனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.