லிட்டில் இந்தியா ரெக்ஸ் திரையரங்கு மூடப்பட்டது

எஸ். வெங்கடேஷ்வரன்

கடந்த ஒன்பது ஆண்டுகளாக லிட்டில் இந்தியாவில் திரைப்பட ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வந்த 'ரெக்ஸ் சினிமாஸ்' திரையரங்கம் தனது கதவுகளை மூடிவிட்டது. 'நார்த்-=சௌத் கொரிடோர்' எனும் வடக்கு=தெற்கு விரைவுச்சாலைப் பணிகளுக்காக மூடப்பட்டு வரும் பல கட்டடங்களுள் மெக்கென்ஸி சாலை யில் அமைந்திருக்கும் ரெக்ஸ் திரை யரங்கமும் ஒன்று. இதே காரணத்துக்காக அருகில் உள்ள எலிசன் கட்டடமும் மூடப்பட்டு அங்கிருந்த கடைக்காரர்களிடமிருந்து கடைகளையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ரெக்ஸ் திரையரங்கம் கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் தனது செயல் பாட்டை நிறுத்திக்கொண்டதாகக் கூறி னார் ரெக்ஸ் சினிமா தலைமை நிர் வாகி செந்தில்குமார், 35. ஆகக் கடைசிக் காட்சியாக ஜூன் 21ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு ஜெயம் ரவி நடித்த 'டிக்...டிக்...டிக்' திரை படம் காண்பிக்கப்பட்டது. அடுத்த பத்து நாட்களுக்குள், அதாவது ஜூன் 30ஆம் தேதி திரையரங்கக் கட்டடம் அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டதாக திரு செந்தில் கூறினார்.

லிட்டில் இந்தியாவில் 2009ஆம் ஆண்டு அக்டோபர் முதல் திரைப்பட ரசிகர் களின் ஆதரவுடன் வெற்றிநடை போட்டு வந்த ரெக்ஸ் திரையரங்கம் மீண்டும் அதே இடத்தில் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறி. படம்: வான் பாவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!