சென்னை: எட்டாவது நாளாக நேற்றும் லாரிகள் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்திருப்பதாகக் கூறப் பட்டது. அத்தியாவசியப் பொருட் களுக்குத் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படும் அபாயம் நிலவு கிறது. தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத் துக்கோ லாரிகள் செல்ல முடியாமல் மாநில எல்லையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20ஆம் தேதி முதல் கால வரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயும் தமிழக அரசுக்கு ஏழாயிரம் கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் பட்டது.
இதன் தொடர்பிலான பிரச் சினைகளுக்கு விரைந்து தீர்வு காணுமாறு மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.