லாரி வேலைநிறுத்தத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு; கட்காரிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: எட்டாவது நாளாக நேற்றும் லாரிகள் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்திருப்பதாகக் கூறப் பட்டது. அத்தியாவசியப் பொருட் களுக்குத் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்படும் அபாயம் நிலவு கிறது. தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத் துக்கோ லாரிகள் செல்ல முடியாமல் மாநில எல்லையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 20ஆம் தேதி முதல் கால வரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரக்கு போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயும் தமிழக அரசுக்கு ஏழாயிரம் கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் பட்டது.

இதன் தொடர்பிலான பிரச் சினைகளுக்கு விரைந்து தீர்வு காணுமாறு மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!