கடந்த ஆண்டை ஒப்புநோக்க, இவ்வாண்டின் முற்பாதியில் அதிக மான மோட்டார்சைக்கிளோட்டிகள் விபத்துகளில் சிக்கி, உயிரிழந்த தாக போலிஸ் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கை யில், போக்குவரத்து விபத்துகளும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் குறைந்தன. இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை 2,216 மோட்டார்சைக் கிளோட்டிகள் விபத்தில் சிக்கினர். சென்ற ஆண்டின் முற்பாதியுடன் ஒப்புநோக்க, இது 1.9% அதிகம். 2017ன் முதல் ஆறு மாதங்களில் 2,175 மோட்டார்சைக்கிளோட்டிகள் விபத்தில் சிக்கினர்.
2018 முற்பாதியில் மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட, உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து களின் எண்ணிக்கை 27. சென்ற ஆண்டை ஒப்புநோக்க இது 12.5% அதிகம். 2017 முற்பாதியில் இந்த எண்ணிக்கை 24ஆக இருந்தது. அதேபோல, சாலை விபத்து களில் சிக்கி காயமடைந்த மோட் டார்சைக்கிளோட்டிகள் மற்றும் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றவர்களின் எண் ணிக்கையும் சற்று கூடியது. 2017 முற்பாதியில் 2,394ஆகப் பதிவான அத்தகையோரின் எண்ணிக்கை இவ்வாண்டின் அதே காலகட்டத் தில் 0.7% கூடி, 2,411ஆகப் பதி வானது.
ஒட்டுமொத்தத்தில், 2018 ஜனவரி முதல் ஜூன் வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 57% மோட்டார்சைக்கிளோட்டிகள் தொடர்புடையவை. அதேபோல, சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் 44 விழுக் காட்டினர் மோட்டார்சைக்கிளோட்டிகளே.