வட்டார வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கும் அனைத்துலக ஒத்து ழைப்புக்கும் பன்முகத்தன்மை முக்கிய மானது எனும் ஆசியானின் வலுவான நம்பிக்கையை பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். மாறிவரும் அரசியல் சூழல்கள், முக்கிய வல்லரசுகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள், இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் பின்னணியில் நேற்று நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் லீ இவ்வாறு கூறினார்.
நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக் கும் ஒன்றிணைந்த உலகத்தை எதிர்கொண்டு சவால்களைச் சமாளிக்க ஆசியான் இதர பங்காளி நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று பிரதமர் கூறினார். "வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய ஆசியானை மையப்படுத்திய வட்டார கட்டமைப்பைப் பராமரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்," என்று சன்டெக் மாநாட்டு மையத்தில் ஆசி யான் தலைவர்கள், பேராளர்களிடையே உரையாற்றியபோது பிரதமர் கூறினார்.
ஆசியான் தொடங்கப்பட்டதிலிருந்து 51 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆசியானுக்கு சிங்கப்பூர் தலைமை தாங்கி நடத்துகிறது. ஆசியானின் வளர்ச்சிக்கும் நிலைத் தன்மைக்கும் முக்கியக் காரணமாக அமைந்த வெளிப்படையான, விதிமுறை சார்ந்த பலதரப்பு அமைப்பு முறையிலான அனைத்துலகச் சூழல் ஒரு திருப்பு முனையை எட்டியுள்ளது.