‘ஆசியானுக்கு ஒளிமயமான எதிர்காலம்’

வட்டார வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கும் அனைத்துலக ஒத்து ழைப்புக்கும் பன்முகத்தன்மை முக்கிய மானது எனும் ஆசியானின் வலுவான நம்பிக்கையை பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தியுள்ளார். மாறிவரும் அரசியல் சூழல்கள், முக்கிய வல்லரசுகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள், இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் பின்னணியில் நேற்று நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் லீ இவ்வாறு கூறினார்.

நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக் கும் ஒன்றிணைந்த உலகத்தை எதிர்கொண்டு சவால்களைச் சமாளிக்க ஆசியான் இதர பங்காளி நாடுகளுடன் இணைந்து செயல்படும் என்று பிரதமர் கூறினார். "வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய ஆசியானை மையப்படுத்திய வட்டார கட்டமைப்பைப் பராமரிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்," என்று சன்டெக் மாநாட்டு மையத்தில் ஆசி யான் தலைவர்கள், பேராளர்களிடையே உரையாற்றியபோது பிரதமர் கூறினார்.

ஆசியான் தொடங்கப்பட்டதிலிருந்து 51 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆசியானுக்கு சிங்கப்பூர் தலைமை தாங்கி நடத்துகிறது. ஆசியானின் வளர்ச்சிக்கும் நிலைத் தன்மைக்கும் முக்கியக் காரணமாக அமைந்த வெளிப்படையான, விதிமுறை சார்ந்த பலதரப்பு அமைப்பு முறையிலான அனைத்துலகச் சூழல் ஒரு திருப்பு முனையை எட்டியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!