பாரபட்சமில்லாத, நம்பகமான நாடாக சிங்கப்பூருக்கு இருக்கும் நற்பெயர் இந்த ஆண்டில் மேலும் மேம்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அனைத்துலகச் சமூகத்துக்கு பயன்தரும் வகையில் பங்களிக்கக் கூடிய நாடாக சிங்கப்பூர் திகழ் வதாக அவர் கூறினார். ஆசியான் மாநாடு உட்பட மேலும் பல நிகழ்வுகளை வெற்றி கரமாக ஏற்று நடத்தியதன் மூலம் சிங்கப்பூர் இதை நிரூபித்துள்ளதாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
அனைத்துலக உறவுகள் தொடர்பாக இவ்வாண்டு சிங்கப்பூர் பல நிகழ்வுகளில் பங்கேற்றதாக நாடாளுமன்றத்தில் அவர் கூறி னார். உலகில் ஏற்பட்டுள்ள பல சவால்களுக்கு இடையே அனைத் துலக நிகழ்வுகளை ஏற்று நடத்தியதாக அவர் கூறினார். "சிறிய நாடு என்கிற முறையில் நிலையற்ற உலகில் நாம் வேகமாக முடிவுகளை எடுக்க வேண்டும்," என்றார் அமைச்சர் விவியன். பல்வேறு அரசதந்திர, பொரு ளியல் திட்டங்களில் மேம்பட சிங்கப்பூர் அயராது உழைத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார். ஆசியானுக்குத் தலைமைதாங்கிய போது சிங்கப்பூர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டது. அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகள், ஊடகம், பல்கலைக் கழகம், ஆய்வு மையங்கள், தனியார் துறை ஆகிய அனைத் தையும் உள்ளடக்கி ஆசியானுக்கு சிங்கப்பூர் தலைமைதாங்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.
"சிங்கப்பூரர்களின் வாழ்க்கை யை மேம்படுத்தவும் உலகளாவிய நிலையில் நமது கருத்துகளை முன்வைக்கவும் ஆசியான் ஒரு முக்கிய தளமேடையாக அமை கிறது," என்றார் அமைச்சர் விவியன். மீள்திறன், புத்தாக்கம் ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு ஆசியானுக்கு சிங்கப்பூர் தலைமை தாங்கியதை அமைச்சர் விவியன் சுட்டினார்.