சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவையொட்டி சிங்கப்பூரர்கள் மூவர் இங்கிருந்து அதிநவீன மோட்டார்சைக்கிளிலேயே தமிழ் நாட்டிற்குச் சென்று சாதனை படைத்துள்ளனர்.
திரு பன்னீர்செல்வம், 53, திரு பாலச்சந்திரன், 56, திரு அருண கிரி, 52, என்ற இந்த மூவரும் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தங்களது பயணத்தைத் தொடங்கினர்.
மொத்தம் 13,000 கி.மீ. தூரத்தை மோட்டார்சைக்கிள் மூல மாகவே கடக்கத் திட்டமிட்டுள்ள இவர்கள், நாளொன்றுக்கு 400 கி.மீ. தூரம் செல்கின்றனர்.
சிங்கப்பூரில் இருந்து மலேசியா, மியன்மார், பங்ளாதேஷ், திபெத், நேப்பாளம் வழியாக இந்தியாவிற்குள் இவர்கள் நுழைந்தனர்.
"சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குத் தெரியப் படுத்தவே இந்தச் சாதனைப் பயணத்தை மேற்கொண்டுள்ளோம். பெரும்பாலும் சாலை வழியாகவே பயணம் செய்தோம். ஆனாலும், சில இடங்களில் படகு மூலம் மோட்டார்சைக்கிள்களை எடுத்து வரவேண்டியிருந்தது," என்று இவர்கள் கூறினர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை இவர்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலைச் சென்றடைந்தனர். இவர்களின் புதுவிதமான மோட்டார்சைக்கிள்களைக் கண்ட தும் அங்கு வந்த பலரும் அவற் றுடன் நின்று படமெடுத்துக் கொண்டனர்.
கிட்டத்தட்ட சொகுசு காரை போன்ற அவர்களின் அதிநவீன 'பைக்'கின் விலை இந்திய மதிப் பில் ரூ. 28 லட்சம் (S$55,000). 1,800சிசி திறன் கொண்ட இந்த வாகனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோ லுக்கு 15 கி.மீ. தூரம் செல்லும்.
அடுத்ததாக, வேளாங்கண்ணி உட்பட இன்னும் பல இடங்களுக்குச் சென்றுவிட்டு, நாளை சென்னை செல்லும் இவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் திரும்பவிருக்கின்றனர்.