நிலா, நிலா ஓடி வா.
நில்லா மல் ஓடி வா’
பல காலம் இப்படிப்
பாடிப் பயன் இல்லையே!
மலை மேலே ஏறி நீ
வருவாய் என்றே எண்ணினோம்.
மல்லிகைப் பூ கண்டு நீ
தருவாய் என்றும் பாடினோம்.
எத்தனை நாள் பாடியும்
ஏனோ நீயும் வரவில்லை
சத்தம் போட்டுப் பாடியும்
சற்றும் நெ ருங்கி வரவில்லை.
உன்னை விரும்பி அழைத்துமே
ஓடி நீ வராததால்
விண்கலத்தில் ஏறியே
விரைவில் வருவோம் உன்னிடம்!
- குழந்தைக் கவிஞர்
அழ. வள்ளியப்பா