"இனிமேல் தரமற்ற படங்களில் எல்லாம் நடித்து எனக்குக் கிடைத்துள்ள நற்பெயரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். "நான் அண்மையில் நடித்து திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தன. எனது நடிப்புத் திறமையை நிரூபிப்பதாகவும் அவை அமைந்தன. அடுத்த கட்டமாக வீரதீரமாக சண்டை போடும் அதிரடி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்," என்கிறார் காஜல்.
"இயக்குநர்களிடம் இருந்து அதுபோன்ற கதைகளை எதிர்பார்க்கிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் அதிரடி படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. வழக்கம்போல் நிறைய சண்டைப் படங்கள் பார்த்து வருகிறேன். அப்போதும் கூட அதுபோல் நடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டது இல்லை. ஆனால் இப்போது திடீரென அந்த ஆசை வந்து இருக்கி றது. தாவிக்குதித்து வில்லன்களுடன் சண்டை போட்டு நடிக்க விரும்புகிறேன். அதற் கான கதைகளுக் காகக் காத்திருக்கி றேன்," என்கிறார் காஜல் அகர்வால்.