நடிகர் விஜய் அண்மையில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதிவாரியாக 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
அதன்பிறகு, நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள போக்குவரத்துச் சந்திப்பில் நடிகர் விஜய்யின் கார் நிற்காமல் சென்றது சாலை விளக்குக் காணொளியில் பதிவானது.
சாலை விளக்கை மதிக்காமல் விஜய்யின் கார் சென்றதாக புகார் எழுந்த நிலையில், போக்குவரத்துக் காவல்துறை நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.