கிருமித்தொற்று இருப்பதைத் தெரிவித்தால் $2,000 வெகுமதி

மருத்துவப் பரிசோதனைக்கு தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் திட்டத்தின்படி  ரொக்க வெகுமதி தருவதாக அறிவிக்கத் தொடங்கியிருக்கும் பல நகரங்களின் பட்டியலில் ஆகக் கடைசியாக கியான்ஜியாங் நகரம் சேர்ந்துள்ளது. கோப்புப்படம்: இபிஏ

கொரோனா கிருமித்தொற்று மையமாக விளங்கும் சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள கியான்ஜியாங் நகரவாசிகள் தாங்களே முன்வந்து தங்களுக்கு கிருமித்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதைத் தெரிவித்து, அதைத் தொடர்ந்து சோதனைகளில் கிருமித்தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்களுக்கு 10,000 யுவான் ($1,990) வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹுபெய் தலைநகர் வூஹானில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நகரத்தில் இதுவரை 197 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்நகரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மருத்துவப் பரிசோதனைக்கு தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் திட்டத்தின்படி ரொக்க வெகுமதி தருவதாக அறிவிக்கத் தொடங்கியிருக்கும் பல நகரங்களின் பட்டியலில் ஆகக் கடைசியாக கியான்ஜியாங் நகரம் சேர்ந்துள்ளது.

#சீனா #ஹுபெய் #கொரோனா #கொவிட்-19

வூஹான்
ஹுபெய்
சீனா
வெகுமதி
$2000
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!