கிருமித்தொற்று இருப்பதைத் தெரிவித்தால் $2,000 வெகுமதி
கொரோனா கிருமித்தொற்று மையமாக விளங்கும் சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள கியான்ஜியாங் நகரவாசிகள் தாங்களே முன்வந்து தங்களுக்கு கிருமித்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதைத் தெரிவித்து, அதைத் தொடர்ந்து சோதனைகளில் கிருமித்தொற்று இருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவர்களுக்கு 10,000 யுவான் ($1,990) வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹுபெய் தலைநகர் வூஹானில் இருந்து கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த நகரத்தில் இதுவரை 197 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அந்நகரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மருத்துவப் பரிசோதனைக்கு தங்களைத் தாங்களே உட்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கும் திட்டத்தின்படி ரொக்க வெகுமதி தருவதாக அறிவிக்கத் தொடங்கியிருக்கும் பல நகரங்களின் பட்டியலில் ஆகக் கடைசியாக கியான்ஜியாங் நகரம் சேர்ந்துள்ளது.
#சீனா #ஹுபெய் #கொரோனா #கொவிட்-19