புத்தாண்டு புத்துணர்வுடன் மக்கள் வேண்டுதல்களும் பல
கடந்த தமிழ்ப் புத்தாண்டின்போது வீட்டில் முடங்கியிருந்த பலருக்கு இவ்வாண்டு சித்திரை புத்தாண்டின்போது கோயில்களுக்குச் செல்ல முடிந்தது மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லைகள் மீண்டும் திறந்து வெளிநாட்டுப் பயணங்கள் எப்போது தொடங்கும் என்பதே பலரது எண்ணங்களில் இருந்த ஒரு கேள்வியாகவும் வேண்டுகோளாகவும் இருந்தது.
இரண்டு கோயில்களிலுமே வழக்கத்திற்கு மாறான கூட்டம் இருந்தாலும் சமூக இடைவெளி கட்டிக்காக்கப்பட்டது. ஆலயங்களுக்குள் செல்லும் பக்தர்களிடையே சமூக இடைவெளி இருப்பதை ஆலயம் உறுதி செய்தது. வார நாளாக இருந்ததால் இன்று காலை 10 மணிக்குப் பிறகு கூட்டம் கணிசமாகக் குறையத் தொடங்கியது.
(இந்தச் செய்தியின் முழு விவரம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில்)