லங்காவித் தீவுக்குச் செல்ல நவம்பர் 15 முதல் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி

சுற்றுப்பயணிகள் லங்காவியில் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தங்க வேண்டும். படம்: ஏஎஃப்பி

லங்காவி: மலேசியாவின் லங்காவித் தீவுக்கு வரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்துலகப் பயணிகள் வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

மலேசிய சுகாதார அமைச்சு, வெளியுறவு அமைச்சு, குடிநுழைவுத் துறை ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு லங்காவித் தீவு தனது கதவுகளைத் திறந்துவிடுகிறது.

இந்த முன்னோடித் திட்டம் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு இடம்பெறும்.

லங்காவித் தீவுக்குப் புறப்படுவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பும் லங்காவிக்கு வந்திறங்கிய இரண்டாவது நாளிலும் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

குறைந்தது 80,000 அமெரிக்க டாலர் (S$107,616) மதிப்பிலான காப்பீடு வைத்திருப்பதும் அவர்கள் லங்காவியில் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தங்கியிருக்க வேண்டியதும் அவசியம்.

இந்த முன்னோடித் திட்டத்தை ஆராய்ந்த பிறகு, இது மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சொன்னார்.

லங்காவி
சுற்றுப்பயணி
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!