‘தொற்று அபாயமுள்ள’ நாடுகள்: பட்டியலைப் புதுப்பித்துள்ள இந்தியா
‘தொற்று அபாயமுள்ள’ நாடுகள் பட்டியலில் இருந்து பங்ளாதேஷை இந்தியா கடந்த வாரம் நீக்கி இருந்தது.
தற்போது, கானா, தான்சானியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, தான்சானியா, ஹாங்காங், இஸ்ரேல், நியூசிலாந்து, மொரிஷியஸ், ஸிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ‘தொற்று அபாயமுள்ள’ நாடுகளாக உள்ளன.
தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து இந்தியா செல்வோர், விமான நிலையத்திற்கு வந்திறங்கியவுடன் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு, அதன் முடிவில் ‘தொற்று இல்லை’ எனத் தெரியவந்த பிறகே விமான நிலையத்தைவிட்டு வெளியேற முடியும்.