வெளிநாட்டில் இந்தியரைக் கொன்றதாக பாகிஸ்தானியர் கைது

ஷார்ஜா: இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது ஆடவர் ஒருவர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் கொல்லப்பட்டார்.

அவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானியர் ஒருவரைக் காவல்துறை அதிகாரிக கைதுசெய்தனர். 

இச்சம்பவத்தில் மேலும் இரண்டு கேரள ஆடவர்களும் ஓர் எகிப்து ஆடவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மாண்ட நபரின் பெயர் ஹக்கிம். அவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஷார்ஜாவில் உள்ள ஒரு பேரங்காடியில் மேலாளராகப் பணியாற்றி வந்தார் என்றும் கேரள ஊடகச் செய்தி கூறியது.

தமது சக ஊழியர்கள் இருவருக்கும் அருகிலுள்ள காப்பிக்கடையில் பணியாற்றிய பாகிஸ்தான் ஆடவருக்கும் வாக்குவாதம் மூண்டதைக் கண்ட ஹக்கிம், அவர்களை விலக்கிவிட முயன்றார்.

ஆனால், அப்போது அந்தப் பாகிஸ்தானியர், ஹக்கிமைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

ஹக்கிமின் குடும்பத்தினர் அவருடன் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் வசித்து வந்தனர் என்றும் அண்மையில்தான் அவர்கள் இந்தியா திரும்பினர் என்றும் சொல்லப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!