வேலூர் தேர்தல் ரத்தாகவில்லை

தமிழகத்தின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கான உத்தரவை வெளியிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய இந்தியத் தேர்தல் ஆணையம், அந்தத் தொகுதியில் தேர்தல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்ட சர்ச்சையினால் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் கூறியதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆணையம் அவ்வாறு தெரிவித்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) வேட்பாளர் கதிர் ஆனந்தின் அலுவலகத்திலிருந்து போலிசார் ரொக்கப்பணத்தைப் பறிமுதல் செய்ததை அடுத்து தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.

தனது தேர்தல் உறுதிமொழி ஆவணத்திலும் நியமனப் பத்திரங்களிலும் தவறான தகவல்களைக் குறிப்பிட்டதன்பேரில் ஆனந்த் குற்றம் சாட்டப்பட்டார். அந்தக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

திமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான துரைமுருகனின் மகன்தான் இந்த ஆனந்த்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலின் முடிவுகள் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்தத் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திமுகவை எதிர்த்துப் போட்டியிடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!