சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தமாகாவின் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று முன்தினம் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். "நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைப் பாஜகவுடன் இணைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பாஜகவில் இணைவது என்பது தற்கொலைக்குச் சமம். காங்கிரசிலிருந்து தற்காலிகமாக வெளியேறியிருந்தாலும் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக் கின்றன," என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.