கேரளம்: வெளிமாநில ஊழியரைக் கட்டிவைத்து அடித்துக்கொன்ற கும்பல்

எர்ணாகுளம்: வெளிமாநில ஊழியர் ஒருவரைக் கட்டிவைத்து அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இதன் தொடர்பில் பத்துப் பேரைக் கைதுசெய்து, காவல்துறை விசாரித்து வருகிறது.

வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அசோக்தாஸ், 24. இவர் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், மூவாட்டுப்புழா அருகே வாலக்கம் பகுதியிலுள்ள ஓர் உணவகத்தில் வேலை செய்துவந்தார்.

இந்நிலையில், அசோக் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 4) மாலையில் உடன் பணிபுரிந்த ஒரு பெண்ணைப் பார்க்கச் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து விசாரித்தது. அவர்களிடமிருந்து அசோக் தப்பித்து ஓட முயன்றார். ஆனால், அவரைப் பிடித்த கும்பல், அவரை இரும்புத் தூணில் கட்டிப்போட்டு, கடுமையாகத் தாக்கியது.

தகவலறிந்து காவல்துறை அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, அசோக்கின் உடலிலிருந்து ரத்தம் அதிகமாகச் சொட்டியது. அவர் நெஞ்சிலும் தலையிலும் காயமடைந்திருந்தார்.

உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

அசோக்கைத் தாக்கியதற்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறை முயன்று வருகிறது. அவர் பார்க்கச் சென்ற பெண் அவர்மீது புகாரளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!