மும்பை: தாயைப் பராமரிக்கத் தவறிய மகனுக்கு மூத்த குடிமக்கள் பராமரிப்பு நடுவர் மன்றம் (எஸ்சிஎம்டி) பிறப்பித்த உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.
அந்தத் தாய் அன்பின் பேரில் தன் மகனுக்கு அளித்த இரண்டு சொத்துகளின் உரிமையை ரத்து செய்ததோடு, அந்த மகனையும் அவருடைய மனைவியையும் அந்தத் தாயிடமிருந்து பரிசாகப் பெற்ற வீட்டில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று எஸ்சிஎம்டி அளித்த தீர்ப்பை அது உறுதிப்படுத்தியது.
ஒருவரைச் சொந்த வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது ஒருவருடைய அடிப்படை வசதிகளை மறுப்பது ஒப்பாகும் என நீதிபதி சந்தீப் வி. மார்னே தீர்ப்பளிக்கும்போது கூறினார்.
மேலும், வயதான தாய்க்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது மகனின் கடமை என்றும் அதைச் செய்ய அந்த மகன் தவறிவிட்டார் என்றும் நீதிபதி தெரிவித்தார்.