இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் இன்று காலை பெய்த கனமழை, இதுவரை கடும் வெப்பத்தால் தவித்திருந்த மக்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. இன்றும் நாளையும் மழை விட்டுவிட்டுப் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் அதிகபட்சமாக 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. ஆயினும், அம்மாநிலத்திலுள்ள பல்வேறு இடங்களில் வெள்ளம் நிரம்பி வழிவதை ஊடகப் படங்கள் காட்டுகின்றன.
வீதிகளில் வெள்ளநீருக்கு மத்தியில் வாகனங்கள் செல்கின்றன.
அத்துடன், பாதசாரிகளும் நடந்தவாறு வெள்ளநீரைக் கடக்க முயல்கின்றனர். நீருக்கடியில் கல், முள் அல்லது குழிகள் உள்ளனவா என்ற பயத்தை எல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் தங்களது அன்றாட வழக்கத்தைத் தொடரும் கட்டாயத்தில் இவர்கள் உள்ளனர்.
ஒருசிலர் படகுகளைப் பயன்படுத்தி அங்குமிங்கும் செல்கின்றனர்…
இவ்வாண்டின் பருவமழை வெள்ளத்தால் இந்திய துணைக்கண்டத்தில் குறைந்தது 666 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவாலும் மில்லியன் கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்தில் உள்ளனர்.