ஊரடங்கு வேளையில் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு வழியிலேயே பிரசவமானது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மகாராஷ்டிராவில் நாசிக் நகரில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ஊரடங்கு நீடித்ததால் நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியுடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.
பேருந்து, ரயில் வசதி இல்லாததால் இருவரும் நடந்தே சென்றனர்.
இந்நிலையில் வழியிலேயே அப்பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது.
அதன்பிறகும் இருவரும் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக ஒரு வாகனத்தை அனுப்பி இருவரையும் அழைத்து வந்தனர்.
தற்போது தாயும் குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.