ஊரடங்கால் நடைப்பயணம்; சாலையிலேயே பிரசவித்த பெண்

ஊரடங்கு வேளையில் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு வழியிலேயே பிரசவமானது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மகாராஷ்டிராவில் நாசிக் நகரில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு நீடித்ததால் நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியுடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.

பேருந்து, ரயில் வசதி இல்லாததால் இருவரும் நடந்தே சென்றனர்.

இந்நிலையில் வழியிலேயே அப்பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது.

அதன்பிறகும் இருவரும் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக ஒரு வாகனத்தை அனுப்பி இருவரையும் அழைத்து வந்தனர்.

தற்போது தாயும் குழந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!