மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசில் சுஜாதா மண்டல் கான் சேர்ந்து சில மணி நேரங்களில் அவரை விவாகரத்து செய்யப் போவதாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரான செளமித்ரா கான் அறிவித்துள்ளார்.
இதனால் தம்பதியரின் பத்து ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
செளமித்ரா கான், மேற்கு வங் காளத்தில் பாஜகவின் இளையர் அணித் தலைவராகவும் இருக்கிறார்.
“நான் உனக்கு முழு சுதந்திரம் வழங்கினேன். இனி என் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்தாதே. உனது பெயருக்குப் பின்னால் இருக்கும் எனது பெயரையும் எடுத்துவிடு. திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தது மூலம் பெரும் தவற்றைச் செய்துவிட்டாய்” என்று செளமித்ரா கான் ஆத்திரத்துடன் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான திலிப் கோஷ், செளமித்ரா கானின் மனைவியாகத்தான் சுஜாதா அடையாளம் காணப்பட்டார். இது, அவருடைய முடிவு. அவருக்கு அதிர்ஷ்டம் உண்டாகட்டும் என்று தெரிவித் தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
சென்ற திங்களன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான சௌகதா ராய் முன்னிலையில் சுஜாதா மண்டல் கான் அக்கட்சியில் சேர்ந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா மண்டல் கான், ஊழலில் ஈடுபடுபவர்களுக்கே பாஜக அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நேர்மையானவர்கள் அக்கட்சியை கண்டுகொள்வதில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என் கணவர் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்தேன். பல்வேறு தியாகங் களைச் செய்தேன். ஆனால் அதற்காக எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அன்புக்குரிய தலைவர் மம்தா பானர்ஜியின் தலைமையில் மக்களுக்கு சேவையாற்ற விரும்பு கிறேன். இதை எனது கணவரும் விரைவில் உணர்வார். ஆனால் அவருடைய எதிர்காலத்தை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்,” என்று சுஜாதா மண்டல் கான் கூறினார்..