திருவனந்தபுரம்: தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சபரிமலை கோவில் நடை வரும் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், முதற்கட்டமாக நாள்தோறும் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதற்கு, பக்தர்கள் இணையம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். பக்தர்கள் முழுமையாக கொவிட்-19 போட்டிருக்க வேண்டும் அல்லது ‘பிசிஆர்’ பரிசோதனை செய்துகொண்டு, ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
பம்பை ஆற்றில் புனித நீராடவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
“சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறப்பையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பம்பை, பத்தனம்திட்டா, எரிமேலி ஆகிய இடங்களில் மருத்துவ வசதிகள், பரிசோதனை வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன,” என்று கேரள தேவசம் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் நேற்று புதன்கிழமை சட்டமன்றத்தில் தெரிவித்தார்.