புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் சுமாா் 90 மில்லியன் (9 கோடி) கணக்குகளில் ரூ.26,697 கோடி உரிமை கோரப்படாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
"ரிசா்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, 2020 டிசம்பா் 31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 8.13 கோடி (8,13,34,849) கணக்குகள் இயக்கப்படாமல் உள்ளன. அந்தக் கணக்குகளில் போடப்பட்ட 24,356 கோடி ரூபாய் உரிமை கோரப்படாமல் உள்ளது.
"நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படாமல் உள்ள 77,03,819 கணக்குளில் ரூ.2,341 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. பல வைப்புத்தொகை கணக்குகள், முதிா்வுக்காலம் முடிந்து 7 ஆண்டு களாகியும் அவற்றிலிருந்து பணம் எடுக்கப்படாமல் உள்ளது.
"வங்கிக் கணக்குகள் இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டு வாடிக்கையாளா்களுக்கு கடிதம் எழுதுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றார்
நிர்மலா சீதாராமன்.