திருவனந்தபுரம்: கேரளாவில்
குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கேரள அரசுக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு திருவனந்த
புரத்திற்குச் சென்றுள்ளது.
இந்த குழுவினர் கேரளாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தினர்.
மேலும், கேரளாவில் நிலைமையை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் விரைவில் கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்ல இருப்பதாகவும் மத்திய குழுவினர் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளி
லிருந்து கேரளா வந்தவருக்கு குரங்கம்மை ஏற்பட்டுள்ளது.
குரங்கம்மை பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கேரள சுகாதாரத் துறை கூறியது.
குரங்கம்மையால் பாதிக்கப்
பட்டவர் இம்மாதம் 12ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து கேரளா வந்திருந்ததாக அறியப்
படுகிறது.
பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் திருவனந்தபுரம், கொல்லம், பத்தணாம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் பாதிக்கப்பட்டவருடன் அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் பாதிக்கப்பட்டோரின் பெற்றோரும் அடங்குவர்.
அதிகாரிகள் குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களிலும் குரங்கம்மை பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அந்த மாவட்டங்களில் குரங்கம்மைப் பரவலைத் தடுக்க தனிமைப்படுத்தும் மையங்கள் உடனடியாக அமைக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.