திருப்பதி கோயிலில் ஆகஸ்டு மாதம் ரூ.120 கோடி வசூல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் வழிபட வந்த பக்தர்கள் எண்ணிக்கை, தலைமுடி, உண்டியல் நேர்த்திக்கடன் ஆகியவற்றின் விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 0.25 மில்லியன் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இவர்களில் 970,00 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடியை நேர்த்திக்கடனாகச் செலுத்தியுள்ளனர்.

பக்தர்கள் கோவில் உண்டியலில் ரூ.120 கோடியே 5 லட்சம் நேர்த்திக்கடனாகச் செலுத்தி உள்ளனர்.

பக்தர்களுக்கு 1 கோடியே 9 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1ஆம் தேதி மட்டும் 67,193 பேர் வழிபாடு செய்தனர்.

28,750 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் .

ரூ.3.62 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

செப்டம்பர் 2ஆம் தேதி காலையில் நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த சில வாரங்களாக திருப்பதி மலைக்கோயிலுக்கு இட்டுச் செல்லும் அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்தது.

அவ்வப்போது சிறுத்தை மக்களை தாக்கியும் உள்ளது. தற்போது அதிக பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் உள்ளதால் பக்தர்கள் நிம்மதியாக கோயிலுக்கு வழிபட வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் நான்கு சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!