புதுடெல்லி: ஜி20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ராஜ்காட் மைதானத்தில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
இளமஞ்சல் நிறத்தில் கதர் துண்டை அனைவரும் அணிந்து கல்லறையைச் சுற்றி நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஞாயிறு காலை புதுடெல்லியில் பெய்த மழை நின்ற நிலையில் பலத்த பாதுகாப்புக்கிடையே உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.