பாரா திடல்தட வீராங்கனையிடம் விமான நிறுவனம் மன்னிப்பு

புதுடெல்லி: விமான வாயிலில் பாரா திடல்தட வீராங்கனையான சுவர்ணா ராஜ் வெளியேறும்போது அவருக்கு சொந்தமான சக்கர நாற்காலியை விமானப் பணியாளர்கள் அவரிடம் கொடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அந்த வீராங்கனை சிரமத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக, இண்டிகோ விமான நிறுவனம் சுவர்ணா ராஜிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

இந்திய பாரா திடல்தட வீராங்கனை சுவர்ணா ராஜ் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை சென்றார். விமானம் தரையிறங்கிய நிலையில், விமான வாயிலில் அவர் வெளியேறியபோது, அவருக்குச் சொந்தமான சக்கர நாற்காலியை அவரிடம் விமானப் பணியாளர்கள் தரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த சக்கர நாற்காலி சேதம் அடைந்த நிலையில் அவரிடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வேதனை தெரிவித்த சுவர்ணா ராஜ், விமான நிறுவனத்திடம் புகார் அளித்தார். ரூ.3 லட்சம் மதிப்புள்ள தனது சக்கர நாற்காலி சேதம் அடைந்ததற்கு விமான நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், அந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து விமான நிறுவனம் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், “இந்தப் பிரச்சினையை விரைந்து தீர்ப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். சுவர்ணா ராஜிடம் பேசி வருகிறோம். வாடிக்கையாளர் அனுபவத்தில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம். அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” எனக் கூறப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!