ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு விளக்கம் கோரி கடிதம்

பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாசக் காணொளிகள் வெளியாகின.

இதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அழைப்பாணை அனுப்பினர்.

இந்நிலையில், ஆபாசக் காணொளி விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பியின் தாயாருக்கு விசாரணைக் குழு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணாவை தொடர்ந்து தாயார் பவானி விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

முன்பிணை மனுவை திரும்பப் பெறவும் ரேவண்ணா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட சட்ட பிரிவுகள் அனைத்தும் பிணை பெறக்கூடிய பிரிவுகள்தான் என நீதிமன்றம் கூறியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!