பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாசக் காணொளிகள் வெளியாகின.
இதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அழைப்பாணை அனுப்பினர்.
இந்நிலையில், ஆபாசக் காணொளி விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பியின் தாயாருக்கு விசாரணைக் குழு விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணாவை தொடர்ந்து தாயார் பவானி விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்பிணை மனுவை திரும்பப் பெறவும் ரேவண்ணா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட சட்ட பிரிவுகள் அனைத்தும் பிணை பெறக்கூடிய பிரிவுகள்தான் என நீதிமன்றம் கூறியுள்ளது.