முஹம்மது ஃபைரோஸ்
அலகு காவடிகள் குத்துவதற்கான கால அவகாசம், பால்குடம் ஏந்து வோர் ஊர்வலமாகச் செல்ல எடுத் துக்கொள்ளும் நேரம், சந்திர கிர கணம் காரணமாக கோவில்கள் மூடப்படும் நேரம் தொடர்பான பக் தர்களின் ஐயங்களையும் அக்கறை களையும் தீர்க்கும் வண்ணம் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை முன் னிட்டு இந்து அறக்கட்டளை வாரி யம் விளக்கக் கூட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமையும் நேற் றும் ஏற்பாடு செய்திருந்தது. இம்மாதம் 31ஆம் தேதி தைப் பூசத் திருவிழா சிங்கப்பூரில் நடை பெறவுள்ளது.
அந்நாளில் சந்திர கிரகணம் மாலை 6.51 மணிக்கு தொடங்கி பின்னிரவு 12.08 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க் கப்படுவதால் ஆலயங்கள் முன் கூட்டியே மூடப்படும் என ஏற்கெ னவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் தைப்பூச ஊர்வலம் வழக்கத்தைவிட ஐந் தரை மணிநேரம் முன்னதாகவே முடிவுறும். எனினும் காவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட் டாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கருத்தில்கொண்டு தைப்பூசத் திருவிழாவிற்கான புதிய ஏற்பாடுகள், விதிமுறைகள் குறித்து விவரங்களைப் பக்தர் களிடம் எடுத்துரைக்க ஸ்ரீ ஸ்ரீநிவா சப் பெருமாள் கோவிலின் பிஜிபி அரங்கில் விளக்கக் கூட்டம் நடை பெற்றது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் கே. வெள்ளையப்பன் பக்தர்களிடம் தைப்பூச விதிமுறைகளை விளக்குகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்