அனைத்துலக மகளிர் தினமான இன்று, மகளிரைப் போற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நூறாண்டு களுக்கு மேல் போற்றப்பட்டு வரும் இந்நாள் கொண்டாட்டத் துக்கான நாள் மட்டுமல்ல.
மகளிர் உரிமைகளைக் கோரவும் அவர்களின் சாதனைகளைப் பாராட்டவும் ஒரு வாய்ப்பாக இந்நாள் உள்ளது. 1900களின் தொடக்கத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்யபிய நாடுகளிலும் பெண்ணுரிமை குறித்த பெரும் நடைபெற்ற விவாதங்கள் மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு வேராக அமைந்தன.
1908ல் நியூயார்க் நகரில் 15,000 பெண்கள் வாக்குரிமையையும் இன்னும் மேம்பட்ட வேலைச் சூழலையும் கோரி வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த எழுச்சியின் நினைவாக 1909ல் அமெரிக்காவில் முதன் முறையாக தேசிய மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது.
1910ல் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற அனைத்துலக பணிபுரியும் மகளிருக்கான மாநாட்டில், அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று கிளாரா ஸேட்கின் யோசனை தந்தார். அதை சில நாடுகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் மகளிர் தினத்துக்கென்று குறிப்பிட்ட தேதியை அறிவிக்காமல், ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு தேதியில் கொண்டாடின.
1911ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் திரண்டனர்.
ரஷ்யாவில் உழைப்பாளி களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்ட நிலையில் அந்நாட்டுப் பெண்கள் முன்கூட்டியே ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். அந்நாளான மார்ச் 8அம் தேதி பின்னர் அனைத்துலக மகளிர் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.