கதை/கவிதை

1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம். காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. அறந்தாங்கி குட்டக்குளம் கரையில் இருக்கும் பெண்கள் துவக்கப் பள்ளியில்தான் நான் பத்தில் ஒருவனாகப் படித்தேன். அத்தா தினமும் காலணா தருவார். பொத்தக்காசு தந்தாத்தான் வாங்குவேன். அதெ சுண்டுவிரல்ல மோதிரமா மாட்டிக்கிட்டு பள்ளிக்கூடம் போவேன். அப்போதெல்லாம் நானும் என் பெரியத்தா மகள் மும்தாஜும் சேர்ந்துதான் எப்போதும் போவோம். வருவோம். அந்தக் காலணாவை உதட்டுக்கும் பல்லுக்கும் இடையே வைத்து விசிலடிக்கும் ஒரு கலை மும்தாஜுக்கு இருந்துச்சு. எனக்கு சொல்லித் தந்துச்சு. எனக்குக் காத்துதான் வருது சத்தமே வரல. அன்று எங்கள் வீட்டுக் கூடத்துல ரொம்ப நேரம் அது சொல்லித் தர நான் ரொம்ப முயற்சி செஞ்சேன்.
இரும்பு மனமும் இசையின் குணமும்
ஈரச்சந்தையிலிருந்து தட்டுத் தடுமாறி வரும்
வெய்யோனின் வெண்கதிர்கள் பட்டதில்லை!
“இன்றிலிருந்து இரண்டாவது நாளில் இறந்து விடுவாய்!!” மீண்டும் அதே குரல் கேட்டது. நடு நிசி தூக்கத்திலிருந்து பாலா பதறியெழுந்தான். மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தும், வியர்வை முத்துக்களால் குளித்திருந்தான். நம்ப முடியவில்லை, கடந்த ஒரு வாரமாய் தவறாமல் அந்தக் குரல் ஒவ்வொரு நாள் இரவு தூங்கும் போது கேட்கிறது. முதல் நான்கு நாட்கள் அலட்சியமாக எண்ணிய பாலா, அந்தக் குரல், நாட்களைச் சரியாகக் கழித்துக் கொண்டு சொல்வதால் கிலி கொண்டான்.