ஊழியரின் வேலையில் திருப்தியில்லை; மேலதிகாரி குத்தியதில் உயிரிழந்த ஊழியர்

மலேசியாவின் பாலிக் புலாவ்வில் உள்ள சிம்ஃபனி கார்டனில் 24 வயது ஊழியரை அவரது கண்காணிப்பாளர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த ஊழியர் உயிரிழந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) மார்பு, அடிவயிறு, நாடி, வலது கை போன்ற இடங்களில் கத்திக்குத்து காயமடைந்த ஊழியர் இன்று (நவம்பர் 23) காலை 11.15 மணியளவில் உயிரிழந்ததாக தென்மேற்கு மாவட்ட காவல் அதிகாரி ஏ. அன்பழகன் கூறினார்.

இந்த சம்பவம் குற்றப்பிரிவு 302ன்கீழ் பதிவாகியுள்ளதாக காவல்துறை அதிகாரி அன்பழகன் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய 27 வயது கண்காணிப்பாளர், அதே நாள் பட்டர்வொர்த்தில் போலிசில் சிக்கினார்.

ஊழியர் மற்றும் அவரது நண்பர்களின் பணியில் திருப்தியடையாததால் கண்காணிப்பாளர் ஊழியரைக் குத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தி ஸ்டார் குறிப்பிட்டது. மேலும், சம்பவம் நடந்த நாளில் ஊழியர் வேலைக்குத் தாமதமாக வந்ததாகக் கூறப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!