மலேசியாவின் பாலிக் புலாவ்வில் உள்ள சிம்ஃபனி கார்டனில் 24 வயது ஊழியரை அவரது கண்காணிப்பாளர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த ஊழியர் உயிரிழந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) மார்பு, அடிவயிறு, நாடி, வலது கை போன்ற இடங்களில் கத்திக்குத்து காயமடைந்த ஊழியர் இன்று (நவம்பர் 23) காலை 11.15 மணியளவில் உயிரிழந்ததாக தென்மேற்கு மாவட்ட காவல் அதிகாரி ஏ. அன்பழகன் கூறினார்.
இந்த சம்பவம் குற்றப்பிரிவு 302ன்கீழ் பதிவாகியுள்ளதாக காவல்துறை அதிகாரி அன்பழகன் குறிப்பிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய 27 வயது கண்காணிப்பாளர், அதே நாள் பட்டர்வொர்த்தில் போலிசில் சிக்கினார்.
ஊழியர் மற்றும் அவரது நண்பர்களின் பணியில் திருப்தியடையாததால் கண்காணிப்பாளர் ஊழியரைக் குத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தி ஸ்டார் குறிப்பிட்டது. மேலும், சம்பவம் நடந்த நாளில் ஊழியர் வேலைக்குத் தாமதமாக வந்ததாகக் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity