ஜோகூர் வழியாக நாட்டுக்குள் நுழையும் மலேசியர்களும் பிற வெளிநாட்டினரும் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்னும் நிலைமையில் மாற்றமில்லை என்று ஜோகூர் முதலமைச்சர் ஹஸ்னி முகம்மது தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாடு நடப்புக்கு வந்தாலும் எல்லைப் பாதுகாப்பில் தமது மாநிலம் கவனமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஜோகூர் வழியாக எத்தனை பேர் நுழைந்தாலும் அத்தனை பேரையும் தனிமைப்படுத்துவதற்கான வசதி உள்ளதாக நேற்று முன்தினம் கோட்டா இஸ்கந்தரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில திரு ஹஸ்னி கூறினார். சாபா, சரவாக் மாநிலங்களிலிருந்து ஜோகூருக்குள் நுழைவோருக்கும் தனிமைப்படுத்தல் உத்தரவு பொருந் தும் என்றார் அவர்.