கொரோனா தொற்றுச் சம்பவங்கள் 150,000க்கு மேல் பதிவான நாடுகளின் குடிமக்கள் அடுத்த வாரம் மலேசியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படவுள்ளது.
இதனால் அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, சவூதி அரேபியா, ரஷ்யா, பங்ளாதேஷ் உள்ளிட்ட நாட்டினர் பாதிக்கப்படுவர்.
அதே நேரத்தில், அவசர காரணங்களுக்காக அல்லது இருதரப்புக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக வருவோருக்கு நுழைவு அனுமதி வழங்கப்படும்.