மலேசியாவில் கொரோனா கிருமியின் புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மலேசியாவின் சாபாவில் கொரோனா தொற்றுப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொவிட்-19ன் புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய A701B வகை கொரோனா கிருமியா அது என்பது இன்னும் தெரியவில்லை என அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வகையைப் போல இது இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சாபாவின் பென்டெங் லஹட் டட்டு குழுமத்தில் இருந்து எடுக்கப்பட்ட 60 பரிசோதனை மாதிரிகளில் இந்த வகை கிருமி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே பரவும் கொவிட்-19ஐவிட இக்கிருமி கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கெடாவில் பெறப்பட்ட பரிசோதனை மாதிரிகளில், பொதுவான கொவிட்-19க்கு காரணமான கிருமியைவிட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய D614G வகை கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து மலேசியாவுக்குச் செல்வோருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்படுவோர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். கிருமித்தொற்று இருப்பவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!