தெம்பனிசில் உள்ள 'கரிஸ்ஸா பார்க்' கூட்டுரிமை வீடுகளின் ஏழாவது மாடியிலிருந்து இந்தோ னீசியப் பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சன்னலைத் துடைத்துக் கொண்டிருந்தபோது நிலை தவறி அவர் கீழே விழுந்ததாக 'ஷின் மின்' செய்தி கூறியது. இச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் நண்பகல் 12.05 மணியளவில் தகவல் கிடைத்ததும் அவசர மருத்துவ வாகனத்தை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்த தாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இருபதுகளில் இருந்த அந்தப் பெண் சாங்கி பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அந்தப் பணிப்பெண் கடந்த ஒரு மாதமாகத்தான் சிங்கப்பூரில் வேலை செய்து வருவதாக அவருடைய முதலாளி தெரிவித் தார். மேலும், சம்பவம் நிகழ்ந்த போது முதிய பெண்மணி ஒரு வரைத் தவிர வேறு யாரும் வீட்டில் இல்லை என்றும் அவர் சொன்ன தாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏழாவது மாடியிலிருந்து தவறி விழுந்து பணிப்பெண் காயம்
5 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Oct 2017 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!