டாக்கா: பங்ளாதேஷ் நீதிமன்றம், நோபெல் பரிசு பெற்ற பொருளியலாளர் டாக்டர் முகம்மது யூனுசிற்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
தொழிலாளர் சட்டத்தை மீறியதாகக் கூறி திங்கட்கிழமை (ஜனவரி 1) அவருக்கு அத்தண்டனை விதிக்கப்பட்டது.
நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று டாக்டர் யூனுசின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
83 வயதாகும் டாக்டர் யூனுஸ், 1983ஆம் ஆண்டு கிரமீன் வங்கியை நிறுவினார். அதன் மூலம் அவர் மேற்கொண்ட வறுமை ஒழிப்பு இயக்கத்திற்காக 2006ஆம் ஆண்டில் அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
கிரமீன் டெலிகாம் எனும் நிறுவனத்தையும் டாக்டர் யூனுஸ் நிறுவியுள்ளார். அதில் ஊழியர் நல அறநிதியை உருவாக்கத் தவறியதற்காக டாக்டர் யூனுஸ் மீதும் அவர் நண்பர்கள் மூவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
நால்வருக்கும் திங்கட்கிழமை சிறைத்தண்டனையுடன் 25,000 டாக்கா (227.82 அமெரிக்க டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டது.
பிணையில் வெளிவர விண்ணப்பித்துள்ள நால்வரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலும் எனத் தெரிவிக்கப்பட்டது.