திருப்பதி: திருப்பதியில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பயங்கரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் திருப்பதியில் வெள்ளிக் கிழமை நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் ஏழுமலையான் கோவில் முன்பு பயங்கரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆந்திர மாநில ஆக்டோபஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.