பௌதிக மாதிரி வடிவமைப்புத் திட்டம் ஒன்றில் சிங்கப்பூருக்கு ஐநாவின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) விருது கிடைத்துள்ளது. கல்வியில் தகவல், தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவது அடையாளம் காணப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைப்பட்ட OSP@SG திட்டம் மாணவர்களுக்குப் பௌதிகப் பாடத்தில் உதவும் வகையில் இருவழி தொடர்பு மாதிரிகளை வழங்குவதாக அமைச்சு கூறியது.
இந்தத் திட்டம் மூலம் சேகரிக்கப்பட்ட வளங்கள் உலகெங்கும் உள்ள மாணவர் களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறன. இந்தத் திட்டத்தில் பல உள்ளூர் பள்ளிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.