செம்பவாங் வெந்நீர் ஊற்றைக் கவர்ச்சிகரமான ஒரு தேசிய பூங்காவாக ஆக்கும் யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த ஊற்று அமைந்துள்ள நிலத்தை சிங்கப் பூர் நில ஆணையத்திடம் திருப் பிக்கொடுக்க தான் ஆயத்தமாக இருப்பதாக தற்காப்பு அமைச்சு அறிவித்து இருக்கிறது. மூத்த தற்காப்பு துணை அமைச்சர் ஓங் யி குங், நேற்று மக்கள் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது இதனைத் தெரிவித்தார். அந்த நிலத்தைத் திருப்பி கொடுப்பதால் தற்காப்பு அமைச்சுக்குப் பாதிப்பு எதுவும் இருக்காது என்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் செயல்முறைத் தேவைகளுக்கும் பாதிப்புகள் இராது என்றும் அமைச்சர் குறிப் பிட்டார். சிங்கப்பூரில் அரிதாக இருக்கக்கூடிய செம்பவாங் ஊற்றை ஒரு பூங்காவாக மாற்ற லாம் என்று நாடாளுமன்ற உறுப் பினர் லிம் வீ கியாக் நாடாளு மன்றத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி யோசனை தெரிவித்தார்.
செம்பவாங் வெந்நீர் ஊற்று இடத்தை திருப்பிக் கொடுக்க தற்காப்பு அமைச்சு ஆயத்தம்
24 Apr 2016 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2016 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!