புத்ராஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
விசாரணைக்காக அழைக் கப்பட்ட ரோஸ்மா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தை நேற்று பிற்பகல் 1.45 மணி அளவில் சென்றடைந்தார்.
அங்கு அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் அவர் பிணையில் விடுவிக்கப் பட்டார். 67 வயது ரோஸ்மா ஆணையத்தின் தலைமையகத் திலிருந்து நேற்று பிற்பகல் 3.15 மணி அளவில் கிளம்பிச் சென்றதாக மலேசிய ஊடகம் தெரிவித்தது.
சரவாக் மாநில கிராமங் களில் உள்ள பள்ளிகளுக்கான சூரிய சக்தித் திட்டத்தில் ரோஸ்மா ஊழலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி மலேசியன் இன்சைட் நியூஸ் தெரிவித்தது.
ரோஸ்மா மீது குற்றம் சுமத்த தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திடமிருந்து ஊழல் தடுப்பு ஆணையம் அனுமதி பெற்றுவிட்டதாக அறியப்படுகிறது.
சரவாக் சூரியசக்தி திட்டம் வாயிலாக ரோஸ்மா 5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவர் மீது இன்று காலை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத் தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தம்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்த ரோஸ்மா, அவற்றை எதிர்க்க வழக்கு விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தார்.
ரோஸ்மா மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு பதிவாகக்கூடும்
10 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2019 09:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
மே 17,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!