தொடர் விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக சென்னை யில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாக்குப்பதிவை முன்னிட்டு வியாழக்கிழமை, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக் கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதி களில் குவிந்ததனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு நேரத்திலும் தொடர்ந்த போக்குவரத்து நெரிசலாலும் பல மணி நேரம் பேருந்து கிடைக் காமலும் பயணிகள் கடும் அவ திக்கு உள்ளாயினர்.
இந்நிலையில், தொடர் விடு முறையை முன்னிட்டு 1,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை நேற்று அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கியதாகத் தெரிவிக் கப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். சித்திரைத் திருநாளை முன்னிட்டு மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
பேருந்து கிடைக்காமல் அவதி
18 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2019 09:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!