42 மில்லியன் ரிங்கிட் விவகாரம்: நஜிப் மறுப்பு

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறு வனத்தின் துணை நிறுவனம் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 42 மில்லி யன் ரிங்கிட் தொகை தமது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதை பிரதமர் நஜிப் ரசாக் மறுத் திருப்பதாக அவரின் வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக்கிற்கு எதிராக திரு நஜிப் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலத்தில் அந்த நிதியை பெற்றுக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப் படுகிறது. ஆனால், 42 மி. ரிங்கிட் அவரது வங்கிக் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஹவாரிசாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான ‚விசாரணை முடியும் வரையில் தமது கட்சிக் காரர் எந்தப் பதிலும் கூற மாட்டார் என்றும் ஹவாரிசாம் கூறினார். மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த நன்கொடை யாளரிடமிருந்து 2.6 பில்லியன் ரிங்கிட், எஸ்ஆர்சி நிறுவனத்திடமிருந்து 42 மில்லியன் ரிங்கிட் தொகையை பிரதமர் நஜிப் பெற்றுள்ளதால், அவர் நாட்டை வழிநடத்தத் தகுதியற்ற வர் என திரு லிங் லியோங் சிக் கருத்து தெரிவித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!