நேற்றைய நிலவரப்படி அனுமதிஇன்றி சிங்கப்பூருக்குள் வருவது தொடர்பாகவும் வீட்டிலேயே இருக்க விடுக்கப்பட்ட உத்தரவை மீறியதற்காகவும் 89 பேரின் வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்த 89 பேரில் 73 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சென்று முறையான அனுமதி பெறாமல் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர்.
16 பேர் தங்களுக்கு விடுக்கப்பட்ட கட்டாய விடுப்பு அல்லது வீட்டிலேயே இருக்கும் உத்தரவை மீறினர். சிங்கப்பூரில் வேலை செய்ய இவர்கள் அனைவருக்கும்
நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறிய சில முதலாளிகளின் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் சலுகை இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளது.