தனிமைப்படுத்தப்பட்ட 5வது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

2, தெம்பனிஸ் பிளேஸ் எனும் முகவரியில் செயல்படும் தெம்பனிஸ் தங்கும் விடுதி, தனிமைப்படுத்தப்பட்ட ஐந்தாவது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தங்கும் விடுதியைச் சேர்ந்த 38 பேரை இதுவரை கிருமி தொற்றியதை அடுத்து, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் அவ்விடுதி தனிமைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று (ஏப்ரல் 9) அறிவித்தார்.

சுங்கை தெங்கா, பொங்கோல் எஸ்11, தோ குவான், வெஸ்ட் லைட் தோ குவான் ஆகியவை ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் மற்ற நான்கு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்.

இதையடுத்து, இந்த ஐந்து விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்களும் 14 நாட்களுக்குத் தங்களது அறைகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எஸ்11 தங்கும் விடுதியைச் சேர்ந்த 166 பேர் உட்பட வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் மட்டும் 202 பேரைப் புதிதாக கிருமி தொற்றியது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றுப் பிரச்சினையைக் கையாள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹியன் தலைமையில் அமைச்சுகள் நிலை சிறப்புப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆயுதப் படையும் போலிஸ் படையும் அங்கு நடவடிக்கைகளை அமல்படுத்த உதவியாக இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!