சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகன் இணையம் வழியாகக் கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சுயசார்பு பாரதம் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் வேலை தேடுவோராக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக உருவாக வேண்டும். மத்திய அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
“பாஜக தமிழகத்தில் எங்கே இருக்கிறது என கேட்டனர். உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுதும் வெற்றி பெற்று அனைத்து உள்ளாட்சிகளிலும் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளோம்.
“அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் வர உள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் தமிழக அரசியல் உள்ளது. தேர்தலைச் சந்திக்க தமிழக பாஜக தயாராக உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கும்,” என்று முருகன் கூறினார்.