மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் நகரில் பயிற்சி விமானம் ஒன்று வானிலிருந்து கீேழ விழுந்ததில் அதிலிருந்த மூவர் படுகாயமுற்றனர். சனிக்கிழமை மாலை
4 மணியளவில் ராஜா போக் விமான நிலையத்திலிருந்து பறக்கத் தொடங்கிய விடி-டிஏஏ என்னும் அந்த சிறிய விமானம் சிறிது நேரத்திலேயே நிலை தடுமாறி வயல்வெளியில் விழுந்து சிதறியது. தொழில்நுட்பக் கோளாற்றால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. படம்: இபிஏ