சமூகத்தில் 13 பேர் உட்பட சிங்கப்பூரில் மேலும் 25 பேருக்கு கிருமித்தொற்று

சமூக அளவில் 13 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 11) நண்பகல் நிலவரப்படி புதிதாக 25 பேருக்கு கொரொனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் தொற்று உறுதியானவர்களில் எழுவர், சாங்கி விமான நிலைய கிருமித்தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள். அந்தத் தொற்றுக் குழுமத்துடன் தொடர்பில் இதுவரை 17 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

சமூகத்தில் தொற்று உறுதியான மற்ற மூவர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.

சமூகத்தில் தொற்று உறுதியான எஞ்சிய மூவருக்கும் முன்னதாக தொற்று உறுதியானவர்களுக்கும் இடையே தொடர்பு இல்லை.

சமூகத்தில் தொற்று உறுதியானவர்களில் எட்டுப் பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.

சிங்கப்பூரில் தற்போது 11 தொற்றுக் குழுமங்கள் உள்ளன.

இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 12 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அந்த 12 பேரில் ஐந்து பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,403ஆக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!