சிங்கப்பூரில் இளம் வயதினருக்கு விரைவில் தடுப்பூசி
இம்மாதப் பிற்பகுதியில் இருந்து கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள இளம் வயதினர் வரவேற்கப்படுவர் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 9ஆம் தேதிவரை, 1.8 மில்லியன் பேர் குறைந்தபட்சம் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பேர் 2வது தடுப்பூசியையும் போட்டுக்கொண்டு, தங்களுக்கான தடுப்பூசி நடவடிக்கையை நிறைவுசெய்துவிட்டனர்.
45 மற்றும் அதற்கு மேல் வயதுடையோரில், தகுதியுள்ள மூவரில் இருவர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் அல்லது தடுப்பூசி பெற முன்பதிவு செய்துள்ளனர்.
ஆயினும், இது போதாது எனக் கூறிய அமைச்சர் கான், அதிகமான மூத்த குடிமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்துள்ளார்.